🌺மாற்றம் ஒன்றே மாறாதது...🌺

ஸங்கீதா வாரியர் எனும் ஒரு தேசியவாதியின் பதிவு.

🍃இது ஒரு துவக்கம்!🍃

இன்று பாரத பிரதமர் மோடி அவர்களின் படம் ஒட்டிய ஆட்டோவை கண்டு நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆட்டோ ஓட்டுனரிடம் நான் ஆட்டோவை photo எடுத்துக் கொள்ளலாமா என்றதும்,
அவரே இறங்கி full view எடுங்க என்றார். எங்கள் 20 நிமிட உரையாடலில் பல விஷயங்களைத் தெரிந்துக் கொண்டேன்.

நெற்றியில் செந்தூரம் அணிந்த திரு. ஜெயசீலன் அவர்கள் பிரதமரின் தீவிர பக்தர். அவர் பாலவாக்கம் பகுதி பிஜேபி உறுப்பினர். பிரதமரின் பேச்சுக்களால் கவரப்பட்டு, அவரைப் பின் தொடர்ந்து,
பிஜேபியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

அவர் ஆட்டோவில் பிரதமரின் படத்தை ஒட்டியதும் பல இடையூறுகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகி உள்ளார். அவரை local திமுக உறுப்பினர்கள் மிரட்டியும் விரட்டியும் துரத்தியுள்ளார்கள்.

அவர் சவாரி ஏற்றிக் கொண்டு செல்லும்போது,
இவர்கள் குடித்துவிட்டு வந்து ரகளை செய்திருக்கிறார்கள். பிரதமரை தகாத வார்த்தைகளால் வசை பாடி இருக்கிறார்கள். அவர் எதையும் பொருட்படுத்தாமல், மோடி அவர்களை தொடர்ந்து வருகிறார்.

இவரைப் பார்த்து இன்னும் இருவர் ஆட்டோவில் மோடி படம் ஒட்டியுள்ளார்களாம். நான்தான் First என்று புன்னகைத்தார்.
பிரதமர் சென்னை வரும் நாட்களில் அவர் ஆட்டோ ஓட்டுவதில்லை. பிரதமர் பேச்சைக் கேட்கத் தவறுவதும் இல்லை.

"மோடி அவர்கள் கொண்டுவந்த திட்டங்களை மக்கள் புரிந்து கொண்டால் நிச்சயமாக திமுக அழிந்து விடும்" என்றார்.

"இங்க யாருக்காவது Farmers Act தெரியுமா? விவரமில்லாமல் பேசுகிறார்கள்" என்றார்.
அதான் பிரதமர் மாதிரி தாடி வெச்சுருக்கீங்களா என்று கேட்க, இந்தத் தேர்தலில் பி.ஜே.பி உறுப்பினர்கள் சட்டசபைக்கு வென்று செல்லும் பொது திருச்செந்தூர் சென்று முருகனை வணங்கி மொட்டை அடித்துக் கொள்ளப்போவதாக கழுத்தில் போட்டிருந்த மாலையைக் காட்டினார்.
ஒரு நிமிடம் திகைத்தே விட்டேன்.
புனித அந்தோணியார் துணை போட்டிருக்கே, நீங்க வாடகைக்கு ஓட்டுறீங்களா என்று கேட்க, "இல்லை இது சொந்த ஆட்டோ" என்றார்.

"எங்கப்பா மதம் மாறினார். நான் மோடி அவர்களின் பேச்சைக் கேட்டு, மீண்டும் ஹிந்துவாகி விட்டேன்" என்றார்.
"எப்படி, தூத்துக்குடிக்காரரா நீங்கள்?" என்றேன்.

"ஆமாம் பக்கத்துல ஏரல்" என்றார். அட நான் பக்கத்து ஊர் வாங்க ஒரு selfie எடுத்துக்கிறேன் என்று நன்றி சொல்லி விடைபெற்றேன்.

ஜெயசீலன் அவர்களின் தொண்டு மகத்தானது. இன்னும் ஆயிரம் ஆயிரம் ஜெயசீலன்கள் வரவேண்டும்.
மாற்றத்தை நோக்கி தமிழகம் முன்னேற வேண்டும்...🌻

நன்றி: ஸங்கீதா வாரியர்.🙏

🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app Compile
You can follow @VasaviNarayanan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.