தகவல் தொழில்நுட்பத் துறை முன்னோடி டாக்டர் கலைஞர்

*இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் 65% ஊழியர்கள் ATT என்று அழைக்கப்படுவார்கள்.

*ATT என்றால் Andra, Telangana and Tamil Nadu.

*TN = "Social + Economical" Development = Kalaignar's Work.
*இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை வளர அடிகோலியது கலைஞர் என்றால் மிகையல்ல.

*தமிழ்நாட்டை தொடர்ந்து ஆந்திராவில் சந்திரபாபு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்தார் .

*கலைஞர் முதல் நபராக கணினி வளர்ச்சி திட்ட செயல்பாடுகளை செய்தது இன்று நாம் பொருளாதாரத்திலும் பல மடங்கு முன்னேறி உள்ளோம்.
*இந்தியாவிலேயே தகவல் தொழில்நுட்பத் துறையில் தனி முத்திரை பதித்தது கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு தான்.

*05-10-1998 இல் தகவல் தொழிற்நுட்பத்துக்கென்றே சென்னை தலைமைச் செயலகத்தில் தனியே துறை தி.மு.க ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் செயல்படத் தொடங்கியது.
*இந்தியாவிலேயே முதல் முறையாக தகவல் தொழிற்நுட்பத்துக்கென்று தனிக் கொள்கை (I.T.Policy) ஒன்றும் தி.மு.க ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

*இக்கொள்கை தகவல் தொழிற்நுட்பத் தொழில் முனைவோர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
*இந்தியாவிலேயே தகவல் தொழிற்நுட்ப வளர்ச்சிக்கென தனிக் கொள்கை உருவாக்கி அறிவித்த முதல் மாநிலமும் தமிழ்நாடுதான்.

*இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான மென்பொருள் பொறியியல் வல்லுநர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
*2000 ஆம் ஆண்டிலேயே தமிழகம் இந்த நிலையை எட்டிவிட்டது தி.மு.க அரசின் சிறப்பான செயல்பாடுகளே இதற்குக் காரணம்.

*1998 செப்டம்பர் வரை சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் 21,371 பேருக்கு விசா வழங்கியது.
*இதே காலகட்டத்தில் மும்பை தூதரகம் 9,734 பேருக்கும், புதுதில்லி தூதரகம், 5,460 பேருக்கும், கொல்கத்தா தூதரகம் 1,367 பேருக்கும் விசாக்களை வழங்கின.

*விசா பெற்றோரில் பெரும்பாலானோர் மென்பொருள் பட்டதாரிகள்.
*இது, மற்ற மாநிலங்களைவிடத் தமிழகத்தில் இருந்துதான் அதிகம் பேர் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு கிடைத்து செல்கின்றனர் என்பதை எடுத்துக் காட்டியது.

*2000 ஆம் ஆண்டு கழக ஆட்சியின்போது 340 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டைடல் மென் பொருள் பூங்கா சென்னை தரமணியில் உருவாக்கப்பட்டு அன்றைய பிரதமர்
வாஜ்பாய் அவர்களால் திறக்கப்பட்டது.

*12 லட்சம் சதுர அடி பரப்பளவுடன், தரை தளம், 12 மேல் தளங்கள், 2 தரைகீழ் தளங்கள் கொண்ட டைடல் பூங்காவில் இருந்து தரை வழியாகவும், செயற்கைக்கோள் வழியாகவும், நுண்ணலைகள் வழியாகவும் செய்திகளை பரிமாறிக் கொள்வதற்கு ஏற்ப வசதிகள் செய்துகொடுக்கப்பட்டன.
*இங்கு, ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.

*முழுவதும் குளிர்ப்பதனப்படுத்தப்பட்ட டைல் பூங்காவில் மின்சாரத்தை சிக்கனப்படுத்துவதற்காக இந்தியாவிலேயே முதல் முறையாக “Thermal Energy Storage System” அறிமுகம் செய்யப்பட்டது.
*அப்போது இந்த “மின்தொகுப்பு முறை” உலகிலேயே மூன்றாவது பெரியது அமைப்பாக விளங்கியது.

*இதே போல் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள சிறுசேரியில் 1000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டுத் தரத்தினாலான பெரிய வன்பொருள் மற்றும் மென்பொருள் தொழிற்நுட்பப் பூங்கா ஒன்றை சிப்காட் நிறுவனம் உருவாக்கியது.
*இதன் மூலம் டைடல் பூங்கா அமைந்துள்ள சென்னை தரமணியிலிருந்து பழைய மாமல்லபுரச் சாலை, தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப நெடுஞ்சாலையாக உயர்வு பெற்றது.

*இந்தச் சாலையில் பல்வேறு மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய மென்பொருள் தொழிற்சாலைகளை கழக ஆட்சிட்யின்போதே நிறுவின.
*சோழிங்கநல்லூரில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (T.C.S) நிறுவனம், ஆசியாவின் மிகப் பெரிய மென்பொருள் மையத்தை தொடங்கியது. அதைத் தொடர்ந்து மற்ற மிகப் பெரிய நிறுவனங்களான விப்ரோ, இன்ஃபோசிஸ் மற்றும் போலாரிஸ் ஆகிய நிறுவனங்களும் தங்களது மையங்களை இப்பகுதியில் நிறுவின.
*இங்கிலாந்திலுள்ள World Tel நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ள கூட்டுத் தொழில் முயற்சியின் காரணமாக, தமிழகம் முழுவதும் கழக ஆட்சியின்போது 13,000 சமுதாய இணைய மையங்களை அமைக்கப்பட்டன.

*இதன் மூலம் ஏறத்தாழ 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.
*கணினியைப் பயன்படுத்தி நெடுந்தொலைவுக்கு அப்பால் வெளிநாடுகளில் உள்ள மருத்துவ வல்லுநர்களிடமிருந்து அறிவுரை மற்றும் வழிகாட்டுதலுடன், நவீன மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு Tele Medicine எனப்படும் தொலைத் தொடர்பு வழி மருத்துவ வசதியும் கழக ஆட்சியின்போதுதான் தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டது.
*இதன் மூலம், சென்னை மாநகரம் மருத்துவ சுற்றுலா நகரமாக வளர்ச்சியடைந்தது

# கணினி கல்வித் திட்டம் #

*உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் பயன்பெறும் வகையில் முதன்முதலாக தமிழ் இணையப் பல்கலைக் கழகமும் தொடங்கப்பட்டதும் தி.மு.க ஆட்சியில்தான்.
*தற்போது இது, தமிழ் இணையக் கல்விக் கழகம் என்ற பெயருடன் செயல்பட்டு வருகிறது.

*மாநிலம் முழுவதும் உள்ள 1,200 மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் கணினியை விருப்பப் பாடமாகக் கற்பிக்கும் திட்டம், 187 கோடியே 66 லட்ச ரூபாய் செலவில் முதலமைச்சர் கலைஞரால் தொடங்கப்பட்டது.
*இதனால் ஒவ்வொரு பள்ளியிலும் 40 மாணவர்கள் என்ற அடிப்படையில் சுமார் 48,000 மாணவர்கள் ஆண்டுதோறும் மென்பொருள் துறையில் வேலை பெறும் வாய்ப்புக்கு தகுதியுடையவர்களாக வெளியே வந்தனர்.
*இத்திட்டம், அரசின் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள், வேளாண் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம், ஆண்டுதோறும் 60,000 மாணவ மாணவியர் கணினிக் கல்வியிலும் தேர்ச்சி பெற்றனர்.
*பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அறிமுகம் செய்யப்பட்ட இந்தக் கணினி கல்வித் திட்டம்தான், இந்தியாவிலேயே முதலாவது மிகப்பெரிய திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

*இத்திட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை 23-04-1999 அன்று தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், “சமூகநீதிக் காவலனாகப்
பாடுபடும் தமிழக அரசு, கிராமப்புற மற்றும் நடுத்தர மக்களிடையே படிக்க வருபவர்களின் நலனில் கவனம் கொள்ளும் என்று நம்பிக்கை கொள்வதாக” தி.மு.க அரசுக்கு பாராட்டுத் தெரிவித்தது.
# அரசுத் துறைகள் கணினிமயம் #

*ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படையான நடைமுறைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்ட கலைஞர், அரசு நிர்வாக வழங்கும் சேவைகள், தங்கு தடையின்றி விரைவாகவும், முழுமையாகவும் மக்களைச் சென்று அடைந்திட வேண்டுமென்ற நோக்கத்துடன், அரசுத் துறைகளை கணினிமயமாக்கினார்.
*முதற்கட்டமாக, பதிவுத் துறை, மோடார் வாகனங்கள் துறை, நிலப் பதிவேடுகள் மற்றும் வரைபடங்கள் துறை, விற்பனை வரித் துறை போன்றவற்றைக், கணினிமயமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தகவல் = கலைஞரின் சாதனைகள் பட்டியல்
You can follow @chockshandle.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.