அவர் பெயர் சூர்தாசர்.பிறவியிலேயே தன் கண்பார்வையை இழந்தவர். அதனால் அவரது குடும்பம்,இவரை ஒதுக்கி வைத்தது. ஒருநாள் அவர்,தன் வீட்டு திண்ணையில் அமர்ந்து இருந்தபோது, தெருவீதியில் சிலர் கிருஷ்ண பஜனை பாடிக்கொண்டு சென்றனர்.
அவர்கள் பாடிய பாடல்களைக் கேட்டு பரவசமடைந்த சூர்தாசர்,
அவர்கள் பாடிய பாடல்களைக் கேட்டு பரவசமடைந்த சூர்தாசர்,
அதில் ஒருவரை அழைத்து, "அய்யா நீங்கள் இப்பொழுது பாடிய பாடல்கள் யாரைப் பற்றியது? மிகவும் நன்றாக இருக்கிறதே"என்று கேட்டார். அதற்கு அவர்,"அய்யா இந்தப்பாடல்கள் கண்ணனை போற்றிப்பாடும் பாடல்கள்.அவனது திருநாமம் சொல்லும் பாடல்கள்" என்றார்.
உடனே சூர்தாசர்"நீங்கள் போற்றிப்பாடிய கண்ணன் எப்படி இருப்பார்"என்று கேட்டார்.அதற்கு அவர்"அய்யா!கண்ணன் சிறு குழந்தை.கருநீல நிறம் உடையவன்.அவனின் புன்னகை முகத்தைப் பார்த்தால் பரவசம் அடையும் நம் மனது,அவன் வசம் போய்விடும். கையில் புல்லாங்குழல் வைத்து,இசையால் இந்த உலகத்தை இயங்க செய்பவன்
என்று கண்ணனை வர்ணித்து விட்டு அவர் கிளம்பி விட்டார்.இதை கேட்ட சூர்தாசர்,கண்ணனை தனது மனக்கண்ணில் பார்த்து, அப்படியே கண்ணனை தன்மனதில் வைத்துப் பாடினார்.பின் தனது வீட்டைவிட்டுச் சென்று,ஒரு ஆற்றங்கரை மரத்தின் அடியில் அமர்ந்து,தினமும் கண்ணனின் வடிவத்தை எண்ணி,பல பாடல்கள் பாடலானார்.
இவரது பாடல்களைக் கேட்க,கூட்டம் கூடியது.தினம் அவர் பாடல்களைக் கேட்க வரும் மக்கள் கூட்டம்,அவர் பசியாற ஏதாவது உணவுப்பொருள் கொண்டுவந்து கொடுப்பர்.அதை அன்போடு ஏற்றுக்கொண்டு,சூர்தாசர் கண்ணனின் கீர்த்தனைகளை பாடி வந்தார்.
இப்படி இருக்க ஒரு நாள் துளசிதாசர் என்னும் ராமபக்தர் அங்கே விஜயம் செய்தார்.இவர் வடபுலத்தில் கம்பரைப்போல் ராமாயணம் வடித்தவர்.அதுவே துளசி ராமாயணம் என்று போற்றப்பட்டது.
சூர்தாசர் இருக்கும் இடத்திற்கு வந்த துளசிதாசர்,அவரது கீர்த்தனைகளைக் கேட்டு தன்னையே மறந்தார்.
சூர்தாசர் இருக்கும் இடத்திற்கு வந்த துளசிதாசர்,அவரது கீர்த்தனைகளைக் கேட்டு தன்னையே மறந்தார்.
சூர்தாசர் பாடி முடிக்கும்வரை அமைதிகாத்த துளசிதாசர்,பின் சூர்தாசரை அழைத்து ஆரத்தழுவி,"இனி நாம் நண்பர்களாக இருந்து இருவரும் ஒன்றாகச்சேர்ந்து கண்ணனின் கீர்த்தனைகளை பாடுவோம்"என்றார்.பணிவன்புடன் இதை சூர்தாசரும் ஏற்று கொண்டு,துளசிதாசருடன் அவரது இல்லம் சென்றார்.
அன்றிலிருந்து தினமும் கண்ணன் கோயிலுக்குச் சென்று,அவனது கீர்த்தனைகளை பாடிவந்தனர் இருவரும்.ஒருநாள் இருவரும் கண்ணன் கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தனர்.அப்பொழுது அவர்கள் எதிரில்,ஊர் மக்கள் சிலபேர் தலைதெறிக்க ஓடிவந்து கொண்டிருந்தனர்.அதில் ஒருவரை தடுத்து நிறுத்திய துளசிதாசர்,
"அய்யா ஏனிந்த பதட்ட ஓட்டம்? ஏதேனும் ஆபத்தா"என்று கேட்டார்.
ஓடிவந்தவர்,"ஆம் அய்யா.எதிரே ஒரு மதம் பிடித்த யானை ஒன்று எல்லோரையும் துரத்திவருகிறது.அதன் பிடியில் அகப்பட்டால் மிதித்தே கொன்றுவிடும்.ஆகவே அனைவரும் ஓடுகிறோம்நீங்களும் தகுந்த பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள்" என்று
ஓடிவந்தவர்,"ஆம் அய்யா.எதிரே ஒரு மதம் பிடித்த யானை ஒன்று எல்லோரையும் துரத்திவருகிறது.அதன் பிடியில் அகப்பட்டால் மிதித்தே கொன்றுவிடும்.ஆகவே அனைவரும் ஓடுகிறோம்நீங்களும் தகுந்த பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள்" என்று
சொல்லிவிட்டு ஓடிவிட்டார்.அப்போது சூர்தாசர்,துளசிதாசரைப் பார்த்து,"நண்பரே! யானை எப்படி இருக்கும்?அதற்கு மதம் என்கிறாரே இவர், அப்படி என்றால் என்ன?"என்று கேட்டார்.
அதற்கு துளசிதாசர்,"சூர்தாசரே? யானை என்பது மிகப்பெரிய மிருகம்.அதற்குக் கோபம் என்கிற மதம் பிடித்துவிட்டால்,
அதற்கு துளசிதாசர்,"சூர்தாசரே? யானை என்பது மிகப்பெரிய மிருகம்.அதற்குக் கோபம் என்கிற மதம் பிடித்துவிட்டால்,
பார்க்கும் அனைத்தையும்,மிதித்து அழித்தேவிடும்.அதனால்தான் எல்லோரும் பயந்து ஓடுகிறார்கள்.நீர் ஒன்றும் கவலைப்படாதீர். நம்முள் கண்ணன் இருக்கும்போது,நமக்கு என்னக்கவலை" எனக் கூறி,கண்ணனை நினைத்து அந்த இடத்திலேயே ஓடாமல், தியானித்து நின்றார் துளசிதாசர்.
மதம் கொண்ட யானை அவர் அருகே வந்து நின்றது.தியானத்தில் இருந்த துளசிதாசரைப் பார்த்தது. பின் அப்படியே பணிந்து வணங்கி அவரை ஆசிர்வதித்துவிட்டு,வந்த வழியே சாந்தமாக திரும்பிச் சென்றது. இதை வியப்புடன் பார்த்த மக்கள்,துளசிதாசரை வணங்கி நின்றனர்.சற்று நேரத்தில் துளசிதாசர் தியானம் கலைந்து,
கண் திறந்து பார்த்தார்.மக்கள் எல்லோரும் அவரை வணங்கி நடந்ததைக் கூறினர்.அதைக்கேட்ட துளசிதாசர்,"எல்லாம் கண்ணன் செயல்.அவனை வணங்குங்கள்"என்று கூறிவிட்டு சூர்தாசரைத் தேடினார்.சூர்தாசர் ஒரு கடையின் மறைவில்,இரண்டு கைகளையும் தன் நெஞ்சில் வைத்துக் கொண்டு,நடுக்கத்துடன் நிற்பதைப் பார்த்தார்.
இப்பொழுது துளசிதாசருக்கு ஒரு சந்தேகம் வந்தது."நம்மைப் போலவே சூர்தாசரும் ஒரு கிருஷ்ண பக்தர்தானே.பின் ஏன் ஒரு யானையை நினைத்து அவர் பயப்படவேண்டும்" என்று நினைத்து சூர்தாசரை அழைத்துவந்து தன் சந்தேகத்தை கேட்டார்.
அதற்கு சூர்தாசர், "துளசிதாசரே! நீர் மிகப்பெரிய ராம பக்தர்தான்,
அதற்கு சூர்தாசர், "துளசிதாசரே! நீர் மிகப்பெரிய ராம பக்தர்தான்,
நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் உன் மனதில் இருக்கும் கண்ணனோ, இளமைத்தேகம் பொருந்தியவன். அதனால் நீங்கள் தியானத்தில் இருந்தபோது,வந்த யானையை கண்ணன் விரட்டி விடுவான். ஆனால் கண்ணில்லாத குருடனான எனக்கு, என் மனக்கண்ணில் உள்ள கண்ணன் ஒரு சிறுகுழந்தை வடிவானவன்.
இதுவரை அவனது சிரித்த முகத்தை வைத்தே,பல பாடல்கள் பாடியுள்ளேன்.ஆனால் யானை மிகப்பெரிய மிருகம் என்று நீர் சொன்னதால்,என் மனதில் உள்ள கண்ணன்,சிறு குழந்தையானவன், யானையைப்பார்த்து பயந்து அழுதுவிட்டால்,பின் நான் எப்படி என் கண்ணனை சமாதானம் செய்வது?
இதுவரை அவன் சிரித்த முகத்தை நினைத்தே பல பாடல்கள் பாடிய எனக்கு,அவன் அழுத முகத்தைக்கண்டால், என்னால் தாளமுடியாது. அதனால்தான் என் இரு கைகளையும், என் நெஞ்சில் வைத்து, யானையை என் கண்ணன் பார்ப்பதை மறைத்துக்கொண்டேன். ஏதும் தவறு இருந்தால் மன்னியுங்கள்" என்று பணிந்து நின்றார்.
இதை கேட்டதும் துளசிதாசர் கண்களில் ஆனந்தக்கண்ணீர் வந்தது. சூர்தாசரே உமது நட்பு, நான் எத்தனையோ பிறவியில் செய்த புண்ணியத்தின் பயனால் கிடைத்திருக்க வேண்டும்.மறுபிறப்பு என்று ஒன்று இருந்தாலும் நீரே எமது நண்பராக வரவேண்டும் என்று அவரை ஆரத்தழுவி, கோயிலுக்கு அழைத்துச்சென்றார்.