நன்றி : ஸ்டான்லி ராஜன் பதிவு.
முழுமையாக படியுங்கள்

திமுகவின் மதசார்பற்ற தன்மை என்பது கிறிஸ்துவத்திடமும் இஸ்லாமியடமும் குலாவி அப்பட்ட இந்து வெறுப்பினை வெளிபடுத்துவது, இதுதான் அவர்களின் பகுத்தறிவு திராவிட கொள்கை.
இதில் தந்தை கருணாநிதியினை விட பன்மடங்கு வெறிபிடித்து நிற்கின்றார் ஸ்டாலினார்.
அவர் பங்கெடுத்த, அவர் பாஷையில் சொல்வதென்றால் கிஸ்மிஸ் விழா எனும் கிறிஸ்மஸ் விழாவில் இந்து விரோத கோஷ்டிகள் கடும் மட்டமான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கின்றது அதை ரசித்து சிரித்து அப்படியே மகிழ்ந்து வந்திருக்கின்றார் ஸ்டாலினார்
"இந்து எனும் பெயரை கேட்டாலே எரிகின்றது" என ஒரு குரல் எழும்ப ஸ்டாலினார் சிரிக்கின்றார், இதுவே இந்து மேடையில் இவரை வைத்து பிறமதம் பெயர் சொன்னால் எரிகின்றது என்றால் ரசிப்பாரா?

இவரா வருங்கால முதல்வர்? இவரா? தமிழ்நாட்டில் மதசார்பற்ற அணி தலைவர்?
அதே மேடையில் தமிழர்கள் சைவர்கள் என்றொரு பெண்மணி பேசுகின்றார், அவர் நெற்றி முழுக்க விபூதி மின்னுகின்றது

அம்மணி உண்மையிலே தமிழ் சைவர் என்றால் ஏ ஸ்டாலினே நீனும் தமிழன் அதனால் சைவன், ஏ சற்குணமே நீயும் தமிழன் அதனால் சைவன் என திருநீறை பூசிவிட்டிருக்க வேண்டும்
ஆனால் கூலிக்கு பாடவந்த அந்த கள்ள சைவ அம்மணி அதை எப்படி செய்யும்?

இந்த குழப்பவாத அம்மணியிடம் ஒரு கேள்விதான்

அம்மணியே கிறிஸ்மஸ் கேக்கினை நீ உண்டுவிட்டாய், அதில் முட்டை கலந்திருந்தாலும் நாகரீகம் கருதி உண்டுவிட்டாய் நல்லது
சரி, தமிழர்கள் சைவர்கள் அல்லவா? சிவலிங்கத்துக்கு படைக்கபட்ட உணவினை முருகன் கோவில் பொங்கலை அந்த தமிழ் சைவ கிறிஸ்தவ கோஷ்டியினை உண்ண சொல் பார்க்கலாம்?

சொல்லம்மா? உண்பார்களா? நடக்குமா? இது கூட சிந்திக்க தெரியாத உங்களுக்கெல்லாம் ஒரு திறுநீறு...
திமுக ஒரு ரகசிய ஆட்டத்தை ஆடுகின்றது, சைவம் என்பது ஏதோ ஒரு இனம் போலவும் அதில் இருந்து ஆளாளுக்கு வெளிவந்தது போலவும் பசப்புகின்றது
சைவம் என்றால் சிவவழி, சைவம் என்றால் உயிரை கொல்லா சாத்வீக உணவு வழி மாட்டுகறியும் மீனும் ஆட்டுகறியும் உண்பவன் எப்படி சைவம் என சொல்லி கொள்ளமுடியும்? அடிப்படையே அடிபடுகின்றது
சைவம் என்பது மதம், சைவம் என்பது இந்தியாவின் காஷ்மீர் பனிலிங்கம் முதல் கன்னியாகுமரி லிங்கம் வரை இருக்கும் ஒரு மதத்தின் பெயர்

அதை எப்படி தமிழன் என சுருக்க முடியும்?
தமிழர்கள் ரிஷிகேஷமும் கைலாசமும் செல்வதும், வட இந்தியர்கள் ராமேஸ்வரம் வருதும் எதற்கு அந்த லிங்கத்தை காணவே, அதை வழிபடவே

அந்த மதம் தான் சைவம், அந்த நீறு பூசிய இணைப்புத்தான் சைவம்
அந்த சைவத்தைதான் இந்து என்பார்கள், இந்து குடும்பம் என்பார்கள்.
இந்து என்றால் எரியுமாம் சைவம் என்றால் கசக்குமாம்

தமிழன் சைவம் என்றால் சிவலிங்கம் தரிசித்து வணங்கி நீறு பூசி நிற்க ஸ்டாலினும் அவர் கோஷ்டியும் தயாரா? இல்லை அல்லவா?

பின் ஏன் இந்த நாடகம்?
தமிழர் சைவர்களாம் ஆனால் திமுக கட்சி திருநீறு பூசாதாம் சைவ பண்டிகைகளை வாழ்த்தாதாம், இதெலலம் என்ன வகை தர்மம்?

இதெல்லாம் அசிங்கம், அவமானம், தேர்தலில் சில வாக்குக்காக கோவணத்துடன் நிற்கும் மகா மகா கேவலம்

காட்சியின் அடுத்த மோசடி எஸ்ரா சற்குணம் , இல்லை அவர் துர்குணம்
சற்குணம் ஒரு பாதிரி என்றே அறியபடமுடியா அளவு மோசமான மதவெறி பிடித்த நபராகிவிட்டார்.

இயேசுவின் வாழ்விலும் இஸ்ரேலில் பல போராட்டங்கள் இருந்தன, ரோமையரையோ சீசரையோ ஏற்க முடியாது என பல கோஷ்டி ஊளையிட்டது
இயேசுவோ சீசரை தலைவனாக ஏற்று வரிகட்டினார், ரோமை உத்தரவுக்கு அடிபணிந்தே சாகவும் செய்தார்

அதுதான் தாழ்ச்சி,அதுதான் ஆன்மீகம், அதுதான் துறவு. ரோமையரை எதிர்த்தாரா? குதித்தாரா?

தன் கடமை எது என சரியாக செய்தார் இயேசு, அவர் பெயரை சொல்லவும் துர்குணத்துக்கு தகுதி இல்லை
இந்து ஆலயங்களின் வருமானம் அரசுக்கு செல்கின்றது, கிறிஸ்தவர் வருமானம் எங்கே செல்கின்றது, துர்குணமோ அவரின் சபையோ நாட்டின் வருமானத்துக்கு சல்லி காசு கொடுத்த இயக்கமா?

எந்த தைரியத்தில் அவரெல்லாம் பேசுகின்றாரோ தெரியவில்லை
துர்குணத்தின் வெள்ளை ஆடையினை நோக்கி இயேசு சொன்னதையே சொல்லலாம்

"ஏ வெள்ளையடிக்கபட்ட கல்லறைகளே, வெளியே அழகாக தெரிகின்றீர்கள் ஆனால் உங்கள் உள்ளுக்குள் பூச்சியும் பாம்பும் மாசும் அருவெருப்பும் துர்நாற்றமும் நிறைந்திருகின்றது" என வெளிவேடக்காரரை சாடினார் இயேசு
அந்த வரி இப்பொழுது துர்குணத்துக்கும் பொருந்தும்

அவர் மனமெல்லாம் இந்து வெறுப்பும், தேச வெறுப்பும், மோடி மேல் அப்பட்டமான வன்மமும் கொண்டு திரிகின்றார், இவர் இயேசுவுக்கும் தொண்டர் அல்ல நாட்டுக்கும் நல்ல குடிமகன் அல்ல‌
போலி துறவி, பிழைப்புவாத கிறிஸ்தவர் அவர் பேராயர் அல்ல‌ பேய் ஆயர்.

சூரியனை வணங்குதல், பசுவினை காளையினை வணங்குதல் என்பதே இந்து தர்மம், இந்துக்கள்தான் அதை செய்கின்றனர்
அதையெல்லாம் மறைத்து சூரியனையும் பசுவினையும் வணங்காதவனையும், பசுவினை வெட்டி கொன்று தின்பவனையும் தமிழன் என சொல்வது மாபெரும் புரட்டு

பசுவினை வணங்கும் பண்டிகையில் அதை வெட்டி தின்பவன் நானும் தமிழன் என எப்படி வரமுடியும்? பொருந்தவே பொருந்தாது
பொங்கல் என்பது இந்து பண்டிகை, இந்து கலாச்சார பண்டிகை

இந்த கூட்டத்தில் இது கிஸ்மிஸ் விழா என கலந்து கொண்ட முந்திரி கொட்டை ஸ்டாலினாரிடம் ஒன்றை கேட்கலாம்

இந்து பண்டிகைகள் கதையாம் கிறிஸ்தவ பண்டிகைகள் நடந்த சம்பவமாம் இதனால் கிறிஸ்தவ பண்டிகைக்கு வாழ்த்துவார்களாம்
இயேசு டிசம்பர் 25ல் பிறந்தார் என்ற ஆவணம் எங்கே உள்ளது? அது பைபிளிலும் இல்லை ரோமையர் கிரேக்கர் குறிப்பிலும் இல்லை

டிசம்பர் என்பது இந்துக்களுக்கு மார்கழி மாதம் போல ஐரோப்பியருக்கும் ஒரு கொண்டாட்ட காலமாக கிறிஸ்துவத்துக்கு முன்பு இருந்தது
அதை கிறிஸ்துபிறப்பு மாதமாக மாற்றி குழப்பி அவர்கள் அடையாளத்தை அழித்தது கிறிஸ்தவம்

மற்றபடி இயேசு பிறந்த சரியான நாளோ, குறிப்போ எங்கு உண்டு? நட்சத்திர நாள் கூட இல்லை

நாம் ஒரு கிறிஸ்தவர், மிக சரியான கேள்வியினை கேட்கின்றோம், முடிந்தால் பகுத்தறிவில் பதிலளிக்கவும்
தேவமாதா கருவுற்ற நாள் என ஒன்று உண்டு அது டிசம்பரில்தான் வரும், இயேசுவும் டிசம்பரில்தான் பிறந்தார்

ஒன்று இயேசு 10 நாளில் பிறந்த குழந்தையாய் இருக்க வேண்டும் இல்லை 12 மாதம் கருவில் இருந்த குழந்தையாய் இருக்க வேண்டும் இரண்டுமே பகுத்தறிவுக்கு முரண்பட்ட விஷயம் அல்லவா?
கொண்டாடுவதாக இருந்தால் சரியான நாளை சரியான ஆதாரங்களுடன் சொல்லி நிறுவிவிட்டு கொண்டாடினால்தானே அது பகுத்தறிவு, இல்லையேல் அது பல்லிளிக்கும் அறிவு

கண்ணன் பிறந்தால் ஆதாரமில்லை என்கின்றீர்கள், இந்துக்களிடமாவது ஆவணி அஷ்டமி ரோகினி என்றொரு அடையாள குறிப்பு உண்டு, இயேசுவுக்கு என்ன உண்டு?
இயேசு பிறந்த உண்மையான நாளை பகுத்தறிவில் கண்டறிந்து கேக் வெட்டி கிஸ்மிஸ் கொண்டாடுங்கள், இந்த பல்லிளித்த அறிவு எல்லாம் நன்றாக இல்லை

இயேசு மொழியில் சொல்வதென்றால்

"ஏ திருட்டு பொய்கார திமுகவே உனக்கு ஐயோ கேடு...

ஏ வெள்ளை அடிக்கபட்ட கல்லறையான துர்குணமே உனக்கு அய்யயோ கேடு.."
உங்களுக்கெல்லாம் என்ன தைரியம் என்றால் "இந்து என்றால் எரிகின்றது" என அந்த கடும் சொல்லை கேட்டு கொண்டும் திமுகவில் பிழைப்புக்காக அமர்ந்திருக்கும் சில நரி இந்துக்களின் அமைதி, அந்த புல்லுருவிகளின் நாவு உங்கள் காலில் பட்டு கொண்டிருக்கும் அந்த தைரியம்
ஆனால் அந்த சிறு கூட்டத்தை விட பெரும் கூட்டம் வெளியில் இருக்கின்றது, அவர்கள் என்ன சொல்கின்றார்கள் தெரியுமா?

#தீமுக__
என்றாலே_
இந்துக்களுக்கு_எரிகின்றது
🔥🔥🔥
(இது ஸ்டேன்லி ராஜன் என்ற கிருத்தவரின் பதிவு. நடுநிலை இந்துக்கள் சிந்திக்கவும்)
You can follow @Raamraaj3.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.