பாவ கதைகள் (2020)
இந்த சீரிஸ் பற்றி எல்லாரும் எழுதிட்டு இருக்கிறாங்க. அதில ரயிலில் அந்த பெண் வாசிக்கிறது பெருமாள் முருகன் எழுதிய 'மாதொருபாகன்' நாவல். அதை பற்றி பார்க்கலாம். இதுவும் ஒரு வகையில பாவ கதைதான். இதை இங்க காட்டணும்னு நினைச்சது வெற்றிமாறன் ஐடியாவா இருக்கும்னு நினைக்கிறேன்
மாதொருபாகன்.

திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாத கணவன் மனைவியான காளி-பொன்னாவின் கதைதான் இந்த நாவல். இதில் அவர்கள் வாழ்க்கை முறையையும், சமூகத்தில் குழந்தை இல்லாமையால் படும் இன்னல்களையும் விவரிக்கிறார். இந்தியாவின் சுதந்திரத்துக்கு முந்திய காலகட்டத்தில் கதை நிகழ்கிறது.
குழந்தை இல்லாதா பெண்களும், ஆண் குழந்தை வேண்டுபவர்களும் திருச்செங்கோடு பதினான்காம் திருவிழாவில் வேற்று ஆண்களோடு உறவாடி பிள்ளை பெற்று கொள்வதாகவும். அவர்களை 'சாமி பிள்ளை' என்று செல்வதாகவும் நாவலில் எழுதி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
காளியினதும் பொன்னாவினதும் குடும்பத்தினர் பொன்னாவை காளிக்கு தெரியாமல் பதினாலாம் திருவிழாவிற்க்கு அனுப்புவதாகவும், அதனால் மனமுடைந்த காளி தூக்கிட்டு தற்கொலை செய்ய செல்வதாகவும் மாதொருபாகன் நாவல் முடிவடைந்திருக்கும்
ஆலவாயன்.

'மாதொருபாகன்' இன் தொடர்ச்சியான 'ஆலவாயான்' நாவல், காளி தற்கொலை செய்துவிட்டான் என்ற முடிவில் இருந்து ஆரம்பிக்கிறது. கணவனை இழந்த பெண் ஒரு சமூகத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை இந்த நாவல் பேசுகிறது
அர்த்தநாரி.

'மாதொருபாகன்' இன் தொடர்ச்சியான 'அர்த்தநாரி' நாவல், காளி தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று ஆரம்பிக்கிறது. பதினாலாம் திருவிழாவுக்கு சென்று வந்த பின்னர் கருத்தரிக்கும் பொன்னாவுக்கும், காளிக்கும் இடையேயான மனப்போராட்டங்களை நாவல் பேசுகிறது.
You can follow @peru_vaikkala.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.