இட ஒதுக்கீட்டை எம்ஜிஆர் பொருளாதார அடிப்படையில் மாற்ற முயற்சித்தார் என்று மூன்றாந்தர கிசுகிசு எழுத்தாளர் @luckykrishna சொல்வது பச்சைப் பொய்.

பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்குள் காலகாலமாக சுக வாழ்க்கை வாழ்ந்த ஆண்டைகளும் இருக்கிறார்கள் என்பது உண்மை.
1/n
கவுண்டர் என்றால் அதில் ஏழ்மையானவர்கள் பெரும்பகுதி உண்டு, @KSivasenap போன்ற காலகாலமாக அதிகாரத்தில் கொழித்த பரம்பரைகளும் உண்டு.

இதில் கடைக்கோடி ஏழைக்கு இட ஒதுக்கீட்டின் பயன் சேரவேண்டும் என்றே எம்ஜிஆர் ஆண்டுக்கு 9000 வருமானம் என பிசியில் கொண்டுவந்தார்.
அதை எதிர்த்து வழக்கம் போல் அதிகாரத்தின் அருகில் இருந்த ஆண்டைகள் போராடி எதிர்மறையான எண்ணம் விளைவித்தனர்.

கடைக்கோடி ஏழைக்கும் இட ஒதுக்கீட்டின் பலன் கிடைக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த எம்ஜிஆர், சதவிகிதத்தை 68 ஆக உயர்த்தி வாய்ப்பை அதிகப்படுத்தி தீர்வு தந்தார்
எம்ஜிஆர் இந்தியாவிலேயே அதிக இட ஒதுக்கீடு கொண்டு வந்தது பொறுக்காத மத்திய பார்ப்பனீய ஆட்சியாளர்கள், கருணாநிதியின் கூட்டணியாளர்கள் எம்ஜிஆர் ஆட்சியை உடனடியாக கலைத்தனர்.

உண்மையின் பக்கமும் சமூகநீதியின் பக்கமும் எம்ஜிஆர் இருந்ததை உணர்ந்த மக்கள் தேர்தலில் மீண்டும் வெற்றிஅளித்தனர்
You can follow @Cibitalks.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.