தற்கால அரசியலில் ரஜினியின் தேவை!

கற்கால, சிந்து சமவெளி & வேத காலங்களில் இருந்து தற்கால நவ நாகரீகம் வரை நாம் ஒன்றினூடே பயணம் செய்து கொண்டிருக்கின்றோம். அது பரிணாம வளர்ச்சி.

வெறும் மனிதன் உடல் மற்றும் அறிவு சார்ந்த மாற்றமாக மட்டுமின்றி அவன் சுற்றம் சமுகம் அதன் அடிப்படையில் (1/13)
அமைந்த குழு மற்றும் அரசியல் கட்டமைப்புகளும் இந்த மாற்றத்தினூடே பயணித்து வருகின்றன.

மன்னராட்சி முதல் மக்களாட்சி வரை, முடியாட்சி முதல் ஜனநாயகத்தின் அடிப்படையில் அமைந்த அரசமைப்பு வரை இது கண்கூடு.

இது ஒரு முடிவில்லா பயணம், சிறந்ததை நோக்கி. ஒவ்வொரு காலகட்டத்திலும் எது (2/13)
சிறந்ததோ அல்லது தேர்ந்தெடுக்கப்படுகிறதோ அது நிலைபெறுகிறது. (Survival of the fittest). இது நியதி.

இதை அப்படியே தமிழக அரசியல் சூழலுக்கும் பொருத்திப் பார்க்க முடியும். இந்திய விடுதலைக்குப் பிந்தைய தமிழக அரசியலில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவை காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகள் (3/13)
70 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாகவோ அல்லது கூட்டணியின் துணையுடனோ இவை தான் ஆண்டு வருகின்றன. அதுவும் 1967லிருந்து திராவிட கட்சிகள் மட்டுமே.

மற்ற கட்சிகள் தேவைக்கேற்றாற்போல சில நேரங்களில் பொதுநலனையும் பலசமயம் தன்நலனையும் சார்ந்து இவற்றுடன் இணைந்து கொள்ளும்.

ஆட்சி (4/13)
அதிகாரத்திற்கு வரும் கட்சிகள் மக்கள் முன் தன் கடமையாக வைப்பது வளர்ச்சி என்பதையே. வார்த்தை சிறியது ஆனால் அர்த்தம் பெரிது.

கடந்த 50 ஆண்டுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் இரு திராவிட கட்சிகளும் பல வளர்ச்சி திட்டங்களை முன்வைத்திருக்கின்றன. அதனால் தமிழகம் பலனடைந்திருக்கிறது (5/13)
என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் முழுபலன் கிட்டியிருக்கிறதா? அவ்வளர்ச்சி அனைத்து மட்டத்திற்கும் சென்று சேர்ந்திருக்கிறதா என்ற கண்ணோட்டத்தில் இருந்து இதை அணுக வேண்டும். அதுவே முறை.

உடனே தமிழகத்தை சில வட மாநிலங்களுடன் ஒப்பீடு செய்து நாம் செழிப்பாக இருக்கிறோம் என்பது சரியல்ல (6/13)
5 ஆம் ரேங்க் வருபவன் 10ஆம் ரேங்க் வாங்குபவனை பார்த்து ஆறுதலடைவது போல இது. இங்கு இலக்கு முதலிடம் அல்லது அதையும் தாண்டி செல்வது. அதற்கு சீரான அனைத்து மட்ட வளர்ச்சி அதி அவசியம். All inclusive growth & development.

பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை ஆண்ட போது அவர்களின் நோக்கம் (7/13)
வணிகம் சார்ந்தது. அதன் தொடர்ச்சியாக அவர்கள் ஏற்படுத்தியது pockets of development, அதாவது சில பகுதிகள் வளர்ச்சி அடையும் மற்ற பகுதிகள் தேங்கி நிற்கும். உதாரணத்திற்கு கல்கத்தா, பம்பாய் & மதராஸ் போன்ற நகரங்களின் வளர்ச்சி.

இது ஏற்றத்தாழ்வு மிகுந்தது. அடுத்து வந்த நமது அரசுகள் (8/13)
இந்நிலையை மாற்ற முயன்று அடுத்த நிலையை மட்டுமே எய்தியிருக்கின்றன. அதாவது வளர்ச்சியானது அடுத்த கட்ட பரவலில் தான் இருக்கிறது. இன்னும் முழுமையாக அனைத்து மட்டத்திற்கும் சென்று சேர வேண்டியுள்ளது.

இங்கு திட்டங்களுக்கு பஞ்சமேயில்லை. பிரச்சினை அது உரியவர்களிடம் சென்று (9/13)
சேர்வதில் தான். இதை தடுப்பது எது? இதை புரிந்து கொள்வதின் மூலமே ரஜினிக்கான தேவையை உணர முடியும்.

முன் சொன்ன மாதிரி, தேங்கி நிற்கும் வளர்ச்சியை அனைத்து கட்ட வளர்ச்சிக்கான பாதையில் எடுத்து செல்ல வேண்டும். அதற்கான காரணிகளை ஆராய வேண்டும். களைகளை எடுக்க வேண்டும்.

தொய்வில்லாமல் (10/13)
இயங்கக்கூடிய ஒரு அரசு / அரசியல் கட்டமைப்பை உருவாக்க அல்லது இருக்கும் கட்டமைப்பை சீர்செய்ய வேண்டும். அதுவே இப்போதைக்கான தேவை. அதுவே நாம் முன் சொன்ன மாற்றம். இதுதான் சமூக பரிணாம வளர்ச்சி.

இதை எய்தும் போது அந்த all inclusive growth சாத்தியமே. அதை நோக்கிய முதல் அடியை (11/)
தனது அரசியல் அறிவிப்பின் மூலம் எடுத்து வைத்தார் ரஜினி. இரண்டாம் அடி அரசியல் மாற்றம் தேவையென தெளிவாக உரைத்தது.

அவருக்கு நன்றாக தெரியும் திராவிட கட்சிகள் வைத்து கொண்டிருக்கும் செலக்டிவ் பொங்கல் என்றுமே சுவைக்காது என. சமத்துவம் வெறும் காகிதத்தில் இருப்பதால் பலனில்லை (12/13)
அதை களத்தில் செயல்படுத்த வேண்டும். அதற்கான நடுநிலை தலைமைக்கு அந்த பரிணாம வளர்ச்சிக்கு காலம் வித்திட்டிருக்கிறது.

அந்த தலைமை தான் ரஜினி!

ஆம், காலம் பேசாது ஆனால் காலம் பதில் சொல்லும்.

சொல்கின்றது! கேட்டுக் கொள்வோம்!

#தலைவர் @rajinikanth (13/13)
You can follow @parthispeaks.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.